செய்திகள்
கொரோனா வைரஸ் பீதி- நீலகிரி, வால்பாறை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது
கொரோனா பீதியை அடுத்து நீலகிரி, வால்பாறை சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
ஊட்டி:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கேரள எல்லையோரம் அமைந்துள்ள கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மாங்கரை, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர், மருத்துவ குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி சோதனை செய்கின்றனர். மேலும் அதில் உள்ள டிரைவர், கண்டக்டர், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்து வருகின்றனர்.
மேலும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து தமிழக எல்லைக்குள் அனுப்பி வருகின்றனர்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கர்நாடகா, கேரள மாநில எல்லை பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட எல்லையில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா பீதியை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா தலங்களான ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டா பெட்டா மலைசிகரம், பைக் காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஒரு சில இடங்களில் குறைவான சுற்றுலா பயணிகள் காணப்படுகிறார்கள். அவர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஊட்டி சுற்றுலா தலங்களில் பணியாற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையம், சுற்றுலா தலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ளார். மேலும் அவரை நேரிடையாக சென்று தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக பஸ்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல் வால்பாறையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் உள்ளிட்டவை மூடப்பட்டதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கேரள எல்லையோரம் அமைந்துள்ள கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மாங்கரை, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர், மருத்துவ குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி சோதனை செய்கின்றனர். மேலும் அதில் உள்ள டிரைவர், கண்டக்டர், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்து வருகின்றனர்.
மேலும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து தமிழக எல்லைக்குள் அனுப்பி வருகின்றனர்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கர்நாடகா, கேரள மாநில எல்லை பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட எல்லையில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா பீதியை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா தலங்களான ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டா பெட்டா மலைசிகரம், பைக் காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஒரு சில இடங்களில் குறைவான சுற்றுலா பயணிகள் காணப்படுகிறார்கள். அவர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஊட்டி சுற்றுலா தலங்களில் பணியாற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையம், சுற்றுலா தலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ளார். மேலும் அவரை நேரிடையாக சென்று தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக பஸ்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல் வால்பாறையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் உள்ளிட்டவை மூடப்பட்டதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.