செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

ஊட்டியில் எந்த சுற்றுலா தலங்களும் மூடப்படவில்லை- கலெக்டர்

Published On 2020-03-12 09:52 IST   |   Update On 2020-03-12 09:52:00 IST
சமூக வலைதளங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக வரும் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.
ஊட்டி:

கொரோனா வைரஸ் பீதியால் கேரளாவில் உள்ள பல சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்கள் எதுவும் மூடப்படவில்லை. சமூக வலைதளங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக வரும் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழக்கம் போல் இந்த ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் கோடை மலர் கண்காட்சி நடைபெறும் என்றார். 

Similar News