செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-01-24 02:50 GMT   |   Update On 2020-01-24 02:50 GMT
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடத்தூர்:

ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போட்டி நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.



இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்காலத்தில் பெண்களுக்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News