செய்திகள்
கைது

வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை கற்பழித்த 3 பேர் சிக்கினர்

Published On 2020-01-20 11:25 GMT   |   Update On 2020-01-20 11:25 GMT
வேலூர் கோட்டை பூங்காவில் கத்தி முனையில் 24 வயது இளம்பெண்ணை கற்பழித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூர் பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அதே கடையில் காட்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். காதல் ஜோடியான 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலை முடிந்ததும் வேலூர் கோட்டை பூங்காவில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கோட்டை பூங்காவில் சிலர் கும்பலாக மது குடிப்பது கஞ்சா என்ற போதை பொருள் பயன்படுத்தி வருகின்றனர். போதையில் அவர்கள் புல்வெளியில் படுத்து விடிய விடிய தூங்குகின்றனர்.

காதல் ஜோடி தனிமையில் இருந்த இடத்தின் அருகே வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் (18), சக்தி (18), அடைமணி (18) ஆகியோர் கஞ்சா போதையில் இருந்தனர்.

3 வாலிபர்களும் காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம் பெண்ணை தனியாக இழுத்தனர். அப்போது தடுத்த அவரது காதலனை அடித்து உதைத்தனர். பெரிய கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர்.

பின்னர் இளம்பெண் அணிந்திருந்த கம்மலை பறித்தனர். அவரது செல்போனையும் பறித்து விட்டனர்.

இதனையடுத்து இளம்பெண்ணை கத்தியால் மிரட்டி 3 பேரும் கற்பழித்தனர். அப்போது அவர் அலறி கூச்சலிட்டார். இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்கினர். முகத்தில் காயம் அடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடிவந்தனர். இதனையடுத்து கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

காதல் ஜோடியிடம் அத்துமீறிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் இளம்பெண்ணின் காதலனிடம் விசாரணை நடத்தினர்.

வேலூர் டவுன் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் இளம்பெண்ணின் காதலனை கற்பழிப்பு நடந்த இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து கும்பல் எப்படி தாக்கினர்.

எந்த இடத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டார் என காதலன் கூறினார். இதன் மூலம் கும்பல் பூங்காவில் போதை பொருள் பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் தெற்கு காவல் நிலையம் கோட்டை பின்புறம் உள்ள பெங்களூர் சாலை மக்கான் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த அஜித் சிக்கினார். அவனிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தது தெரியவந்தது.

இதையைடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வசந்தபுரத்தில் பதுங்கி இருந்த சக்தி, அடைமணி ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News