செய்திகள்
கோப்புப்படம்

வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயற்சி

Published On 2019-12-10 06:55 GMT   |   Update On 2019-12-10 06:55 GMT
வாணியம்பாடி அருகே இன்று காலை ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடி:

ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). இன்று காலை வாணியம்பாடி செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அதே பஸ்சில் ஆம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பயணம் செய்தார்.

வாணியம்பாடி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெகன் மறைத்துவைத்திருந்த தாலியை எடுத்து இளம்பெண் கழுத்தில் கட்டமுயன்றார்.

இதனால் திடுக்கிட்ட இளம்பெண் கூச்சலிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் வாலிபரை மடக்கி பிடித்து இளம்பெண்ணை மீட்டனர். மேலும் ஜெகனை அடித்து உதைத்தனர்.

பஸ் வாணியம்பாடி வந்ததும் அங்கிருந்த போலீசாரிடம் ஜெகனை பயணிகள் ஒப்படைத்தனர். போலீசார் ஜெகனை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவர் தாலிகட்ட முயன்ற இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜெகன் இளம்பெண்னை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News