செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

தாம்பரத்தில் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

Published On 2019-12-07 07:13 GMT   |   Update On 2019-12-07 07:13 GMT
தாம்பரத்தில் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரம் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் முருகன் (36). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் சென்றார். பக்கத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் தகவல் சொல்லிவிட்டு வீட்டை பூட்டி சென்றார்.

இந்த நிலையில் அவரது வீட்டின், பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தெரிவித்தார். உடனே முருகன் அவசரமாக வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

வெள்ளி பொருட்கள், லேப்டாப் போன்றவையும் கொள்ளை போயிருந்தன. இதுபற்றி முருகன் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் இல்லை கைரேகைகளை பதிவு செய்து கொள்ளை கும்பலை பிடிக்க விரைந்துள்ளனர். முருகன் குடும்பத்தோடு வெளியூர் செல்வதை அந்த பகுதியில் உள்ள யாரோ பார்த்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News