செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு

Published On 2019-11-11 09:15 GMT   |   Update On 2019-11-11 09:15 GMT
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலைய பன்னாட்டுமுனை 1-ம் எண் நுழைவுவாயில் அருகே ஒரு மர்ம பை கிடந்தது. நீண்ட நேரமாக இதை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள் பையை எடுத்து சோதனை செய்தனர். அதில் துணிகள் இருந்தது. இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News