செய்திகள்
கொலை (கோப்புப்படம்)

மாமல்லபுரம் அருகே முதியவர் அடித்துகொலை

Published On 2019-11-07 13:28 IST   |   Update On 2019-11-07 13:28:00 IST
மாமல்லபுரம் அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த ஏரிக்கரை ஐயப்பன் கோவில் அருகே இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் கொலையுண்டவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்களத்தை சேர்ந்த மஞ்சுநாதன் என்பது தெரிந்தது. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்மநபர்கள் அழைத்ததால் அவர் வெளியில் சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர் ஏரிக்கரை பகுதியில் கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News