செய்திகள்
முருகன் - நளினி

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு

Published On 2019-11-02 04:36 GMT   |   Update On 2019-11-02 04:36 GMT
வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகிய 2 பேரும் தொடர்ந்து நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

இந்நிலையில், ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இன்று 8-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் 16-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

2 பேரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட அவர்கள் மறுத்து விட்டனர். முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News