செய்திகள்
கேஎஸ் அழகிரி

காங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-10-30 06:38 GMT   |   Update On 2019-10-30 06:38 GMT
ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெற கூடாது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி. ஆனாலும் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News