செய்திகள்
திருப்பத்தூர் அருகே இளம்பெண் வீட்டில் வாலிபர் வெட்டிக் கொலை
திருப்பத்தூர் அருகே இளம்பெண் வீட்டிற்கு சென்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பூ வியாபாரி கைதானார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் செவத்தாதான் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவரது மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் துபாயில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்தவர் பூக்கார கிருஷ்ணன் (42). பூ வியாபாரி. இவரும் அதே பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று இரவு ரமேஷ் இளம்பெண் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் பூக்கார கிருஷ்ணன் அங்கு வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூக்கார கிருஷ்ணன் கத்தியால் ரமேசை வெட்டினார். அவரது கை, கால், கழுத்தின் பின்பகுதி ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த கந்திலி போலீசார் ரமேஷ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூக்கார கிருஷ்ணனை கைது செய்தனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் இளம்பெண் அவரது கணவருடன் தலைமறைவாகி விட்டார்.
இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள கவுண்டப்பனூர் செவத்தாதான் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவரது மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் துபாயில் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தை சேர்ந்தவர் பூக்கார கிருஷ்ணன் (42). பூ வியாபாரி. இவரும் அதே பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று இரவு ரமேஷ் இளம்பெண் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் பூக்கார கிருஷ்ணன் அங்கு வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூக்கார கிருஷ்ணன் கத்தியால் ரமேசை வெட்டினார். அவரது கை, கால், கழுத்தின் பின்பகுதி ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த கந்திலி போலீசார் ரமேஷ் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பூக்கார கிருஷ்ணனை கைது செய்தனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் இளம்பெண் அவரது கணவருடன் தலைமறைவாகி விட்டார்.
இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.