செய்திகள்
வேலூரில் தேர்தல் பிரசாரம் களை கட்டுகிறது - தங்கும் அறைகள் கிடைப்பதில் கடும் கிராக்கி
வெளியூர்காரர்கள் வருகையையொட்டி வேலூர் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 9-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வருகிற 11-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 18-ந்தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். 22-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளராக கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி மீண்டும் களம் இறங்குகின்றனர்.
கடந்த முறை அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுரேஷ் போட்டியிட்டனர். கடந்த முறை 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளோம். அவர் கட்டாயம் வருவார் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூரில் தேர்தல் பிரசார பணிக்காக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும், அதேபோல் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும் வெளியூரில் இருந்து வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் வேலூரில் தேர்தல் திருவிழா போல் களைகட்ட தொடங்கியுள்ளது. வெளியூர்காரர்கள் தங்குவதற்காக ஓட்டல், லாட்ஜ், விடுதிகளில் புக்கிங் செய்ய தொடங்கி விட்டனர். விடுதிகளில் அறைகள் கிடைப்பதில் இப்போதே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனால் மாத வாடகைக்கு வீடுகளை தேடி பிடிக்கின்றனர். வெளியூர்காரர்கள் தினமும் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் வீதம் 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தாசில்தார் நிலையில் அதிகாரி ஒருவரும், உதவி ஆய்வாளர், 2 போலீசார், வீடியோகிராபர், டிரைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பறக்கும் படையினர், தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள், சமூக விரோதிகளின் நடமாட்டம், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகித்தல், தேர்தல் செலவினம் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை வீடியோ மூலமாக முழுவதும் பதிவு செய்ய வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் “சிவிஜில்” என்ற ஆப் மூலமாக புகார்கள் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவை குறித்து கண்டறியப்பட்டால் வாகனத்துடன் கைப்பற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
சோதனையின் போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் அல்லது 10 ஆயிரத்துக்கும் மேல் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை வாகனத்தில் வேட்பாளரோ அல்லது முகவர்களோ கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.
எல்லா நிகழ்வுகளையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். நட்சத்திர பேச்சாளர் தனது சொந்த பயன்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது. அதே நேரத்தில் கட்சியின் பொருளாளர் சான்றுடன் பணம் கொண்டு செல்லப்பட்டால் அதற்கான சான்றின் நகலை காண்பிக்க வேண்டும்.
குறிப்பாக சோதனையின்போது வாகனத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை இருந்து, இதில் வேட்பாளருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இது தொடர்பாக வருமான வரி சட்டத்தின் கீழ் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பறக்கும் படை குழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 9-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வருகிற 11-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 18-ந்தேதி வேட்பு மனுதாக்கல் கடைசி நாளாகும். 22-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளராக கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி மீண்டும் களம் இறங்குகின்றனர்.
கடந்த முறை அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சுரேஷ் போட்டியிட்டனர். கடந்த முறை 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளோம். அவர் கட்டாயம் வருவார் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூரில் தேர்தல் பிரசார பணிக்காக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும், அதேபோல் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும் வெளியூரில் இருந்து வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் வேலூரில் தேர்தல் திருவிழா போல் களைகட்ட தொடங்கியுள்ளது. வெளியூர்காரர்கள் தங்குவதற்காக ஓட்டல், லாட்ஜ், விடுதிகளில் புக்கிங் செய்ய தொடங்கி விட்டனர். விடுதிகளில் அறைகள் கிடைப்பதில் இப்போதே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனால் மாத வாடகைக்கு வீடுகளை தேடி பிடிக்கின்றனர். வெளியூர்காரர்கள் தினமும் ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியிலும் 24 மணி நேரம் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் 3 குழுக்கள் வீதம் 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தாசில்தார் நிலையில் அதிகாரி ஒருவரும், உதவி ஆய்வாளர், 2 போலீசார், வீடியோகிராபர், டிரைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பறக்கும் படையினர், தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள், சமூக விரோதிகளின் நடமாட்டம், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகித்தல், தேர்தல் செலவினம் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை வீடியோ மூலமாக முழுவதும் பதிவு செய்ய வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் “சிவிஜில்” என்ற ஆப் மூலமாக புகார்கள் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவை குறித்து கண்டறியப்பட்டால் வாகனத்துடன் கைப்பற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
சோதனையின் போது ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் அல்லது 10 ஆயிரத்துக்கும் மேல் தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், பரிசு பொருட்கள், மதுபானம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை வாகனத்தில் வேட்பாளரோ அல்லது முகவர்களோ கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.
எல்லா நிகழ்வுகளையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். நட்சத்திர பேச்சாளர் தனது சொந்த பயன்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது. அதே நேரத்தில் கட்சியின் பொருளாளர் சான்றுடன் பணம் கொண்டு செல்லப்பட்டால் அதற்கான சான்றின் நகலை காண்பிக்க வேண்டும்.
குறிப்பாக சோதனையின்போது வாகனத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை இருந்து, இதில் வேட்பாளருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இது தொடர்பாக வருமான வரி சட்டத்தின் கீழ் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பறக்கும் படை குழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.