செய்திகள்
வடசேரி, திங்கள்சந்தையில் 3-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரி, திங்கள்சந்தையில் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
நாகர்கோவில்:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அவரது தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிரசார திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (3-ந்தேதி) கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-ந்தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவருக்கு ஆரல்வாய் மொழியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு தோவாளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிறகு இரவு 8 மணிக்கு திங்கள்சந்தையில் எடப்பாடி பழனிசாமி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அவரது தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிரசார திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (3-ந்தேதி) கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-ந்தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவருக்கு ஆரல்வாய் மொழியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு தோவாளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிறகு இரவு 8 மணிக்கு திங்கள்சந்தையில் எடப்பாடி பழனிசாமி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami