செய்திகள்

கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

Published On 2019-03-18 10:48 GMT   |   Update On 2019-03-18 10:52 GMT
கொடுமுடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கொடுமுடி:

கொடுமுடி அடுத்த சூளை கல்பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). லோகநாதன் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலையை சொந்தமாக மிஷின் வைத்து வேலை பார்த்து வந்தார்.

நேற்று கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதனை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதித்து விட்டு லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News