செய்திகள்

ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு- துணை மதிப்பீட்டில் தகவல்

Published On 2019-02-14 10:14 GMT   |   Update On 2019-02-14 10:14 GMT
வறட்சி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக குடும்பத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.1,200 கோடி அனுமதித்துள்ளது. #TNAssembly #Rs2000SpecialAssistance
சென்னை:

சட்டசபையில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

வறட்சி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு நிதி உதவியாக குடும்பத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்குவதற்கு தமிழக அரசு ரூ.1,200 கோடி அனுமதித்துள்ளது.

இதற்காக 2018-19-ம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளில் 700 கோடி ரூபாய் மற்றும் 500 கோடி ரூபாய் முறையே ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் சேர்க்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #Rs2000SpecialAssistance
Tags:    

Similar News