செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமனம்

Published On 2019-02-14 09:47 GMT   |   Update On 2019-02-14 09:47 GMT
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். #MSUniversity ViceChancellorPichumani
சென்னை:

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த டாக்டர் கே.பாஸ்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய துணைவேந்தரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். புதிய துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பதவி வகிப்பார்.

துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கே.பிச்சுமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பணி நியமன ஆணையை வழங்கினார்.

வேதியியல் பேராசிரியரான பிச்சுணி, ஆசிரிய பணியில் 37 வருடம் அனுபவம் வாய்ந்தவர் எனவும், மதுரை பல்கலைக்கழக பொறுப்புகள் மட்டுமின்றி தைபே, ஜப்பான் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MSUniversity ViceChancellorPichumani
Tags:    

Similar News