கூடுவாஞ்சேரியில் ரவுடி வெட்டிக் கொலை
செங்கல்பட்டு:
நந்திவரம், கூடுவாஞ்சேரி, காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்து விட்டு நண்பர்களுடன் வெளியே வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். உடனே கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடிக்கும் போது கண்ணனுக்கும், உடன் இருந்த கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்ணனின் நண்பர்கள் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட கண்ணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.