செய்திகள்
குடியாத்தம் சீவூரில் இன்று ஊராட்சி சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்
குடியாத்தத்தில் இன்று நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். #DMK #MKStalin
வேலூர்:
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி வருகிறார்.
இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவூர் ஊராட்சியில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் இன்று வேலூர் வருகிறார்.
மாலை 3 மணிக்கு சீவூர் ஊராட்சி சபை கூட்டத்திலும், 4 மணிக்கு கூட்ரோட்டில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
முன்னதாக வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த மாநகர அவைத்தலைவர் ரா.விஜயசங்கர் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அதேபோன்று குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.தனபால் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார். #DMK #MKStalin
மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி வருகிறார்.
இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவூர் ஊராட்சியில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் இன்று வேலூர் வருகிறார்.
மாலை 3 மணிக்கு சீவூர் ஊராட்சி சபை கூட்டத்திலும், 4 மணிக்கு கூட்ரோட்டில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
முன்னதாக வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த மாநகர அவைத்தலைவர் ரா.விஜயசங்கர் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அதேபோன்று குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.தனபால் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார். #DMK #MKStalin