செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர்- உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீது வழக்கு

Published On 2019-01-20 17:03 GMT   |   Update On 2019-01-20 17:03 GMT
கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி வாலிபர் கற்பழித்தார். இதற்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி:

சுசீந்திரம் கொத்தையடி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 23). இவரும், பொற்றையடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

நண்பர் குடும்பத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது தாயார், சிறுமி சிறுவயதாக இருக்கும்போதே குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார். அதனால் சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வந்தார்.

நண்பர்கள் குடும்பம் என்பதால் சிவகுமார், சிறுமி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிறுமியுடன் நெருங்கி பழகினார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை சிவகுமார் ஏமாற்றி கற்பழித்தார். பின்னர் யாரிடம் சொல்லக்கூடாது என சிறுமியிடம் கூறி விட்டு தப்பிச் சென்று விட்டார்.

இதுபற்றி சிறுமி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் தொடர்பாக சிவகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சிறுமியுடன் நெருங்கி பழக சிவகுமாரின் தாயார் அனிதா, சிறுமியின் சித்தி ஜெயா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அனிதா, ஜெயா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News