செய்திகள்

நிலக்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2019-01-16 12:46 GMT   |   Update On 2019-01-16 12:46 GMT
நிலக்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே ஸ்ரீரங்கபட்டியை சேர்ந்த மைனர் பெண்ணிடம் அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது22) என்பவர் பழகி வந்தார். நாளடைவில் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணிடம் நெருங்கி பேசி பழகி உள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைனர் பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்ததில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சந்திரசேகரிடம் தங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி உள்ளனர்.

ஆனால் சந்திரசேகர் திருமணத்திற்கு மறுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு அவரது தாய் சந்திரிகா, தந்தை செல்வக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பேபி மைனர் பெண்ணை ஏமாற்றிய சந்திரசேகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News