செய்திகள்
பார்த்தசாரதி

ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் சஸ்பெண்டு

Published On 2019-01-05 05:14 GMT   |   Update On 2019-01-05 05:14 GMT
உயர் அதிகாரிகளிடம் அவதூறாக பேசியதாக ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். #Suspend
ஆம்பூர்:

ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி (45), வாணியம்பாடி நகராட்சி கமி‌ஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவர் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது.

இதுகுறித்து, விசாரணையில் பார்த்தசாரதி மீதான புகார் நிரூபணமாகியுள்ளது.

இதையடுத்து பார்த்த சாரதியை சஸ்பெண்டு செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த ஆணை சென்னையில் இருந்து பேக்ஸ் மூலம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நகராட்சி கமி‌ஷனர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Suspend
Tags:    

Similar News