செய்திகள்
விபத்தில் பலியான ஆசிரியர் சிவசாமி

திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி

Published On 2018-12-14 05:15 GMT   |   Update On 2018-12-14 05:15 GMT
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநாவலூர்:

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா திவண்டா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி(வயது 45). இவர் திருநாவலூர் ஈஸ்வரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கெடிலத்தில் தனியாக ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு சிவசாமி உளுந்தூர்பேட்டையில் இருந்து கெடிலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

மோட்டார்சைக்கிள் திருநாவலூரை அடுத்த காந்திநகர் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சிவசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்புக்கட்டையில் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட சிவசாமி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவசாமி பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருநாவலூரை அடுத்த சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராசு படையாட்சி(55). விவசாயி. இவர் இன்று காலை விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ராசுபடையாட்சி மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராசு படையாட்சி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News