செய்திகள்

திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது

Published On 2018-12-06 12:42 GMT   |   Update On 2018-12-06 12:42 GMT
திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டியை சேர்ந்த 16 வயது மாணவி கொசவபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும் ஆவிளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் பெருமாள் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். பெருமாள் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுஜிந்தா ஜீவி சாணார்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அபுதல்கா, செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் குழந்தைகள் நல தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா கல்லூரி மாணவர் பெருமாளை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Tags:    

Similar News