செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் உயர்வு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 99.10 அடியாக உயர்ந்தது. #NellaiRain #ManimutharDam
நெல்லை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன.
பின்னர் சில பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 128.38 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 130.97 அடியாக உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வருகிறது. கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.80 அடியாக இருந்தது. இன்று இது 74.20 அடியாக அதிகரித்துள்ளது.
ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளன. அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.50 அடியாக இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 28.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, களக்காடு-5.4, ராமநதி-5, தென்காசி-4.3, கடனா நதி-2, அடவிநயினார் அணை-2.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 4 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2.5 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2.4 மில்லிமீட்டரும், கடம்பூர், வைப்பரில் தலா 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. #NellaiRain #ManimutharDam
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன.
பின்னர் சில பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 128.38 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 130.97 அடியாக உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வருகிறது. கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.80 அடியாக இருந்தது. இன்று இது 74.20 அடியாக அதிகரித்துள்ளது.
ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளன. அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.50 அடியாக இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 28.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, களக்காடு-5.4, ராமநதி-5, தென்காசி-4.3, கடனா நதி-2, அடவிநயினார் அணை-2.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 4 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2.5 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2.4 மில்லிமீட்டரும், கடம்பூர், வைப்பரில் தலா 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. #NellaiRain #ManimutharDam