செய்திகள்

குன்றத்தூர் அருகே ரவுடி கொலைக்கு பழிவாங்க வாலிபரை தீர்த்துக்கட்டினர்- 5 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-11-11 09:32 GMT   |   Update On 2018-11-11 09:32 GMT
ரவுடியை கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டிய வழக்கில் போலீசார் ஐந்து பேரை வலைவீசி தேடிவருகின்றனர். #Murder
ஸ்ரீபெரும்புதூர், நவ. 11-

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). நேற்று மாலை அவர் எருமையூரில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் விஜயை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பலியானார்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பழந்தண்டலம் பகுதியை சேர்ந்த ரவுடி நவரசன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜய் கைது செய்யப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விஜய் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அவரை மர்ம கும்பல் தீர்த்துக்கட்டி விட்டனர்.

எனவே ரவுடி நவரசன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக எருமையூர், பம்மல் பகுதியை சேர்ந்த ரவுடிகள் 5 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினாலதான் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.
Tags:    

Similar News