செய்திகள்

கிருஷ்ணகிரியில் பெண் கழுத்து அறுத்து கொலை

Published On 2018-11-10 16:37 GMT   |   Update On 2018-11-10 16:37 GMT
கிருஷ்ணகிரியில் செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலை கணபதி தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ராணி (வயது 58).

கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராணிக்கு அண்ணன் மகன் ஆவார். இந்த நிலையில் சுரேஷ் தனது செலவுக்கு பணம் வேண்டும் என்று ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மீண்டும் ராணியிடம் சென்று அவர் பணம் கேட்டு தகராறு செய்தார். 

அப்போது அவர் பணம் தரமறுத்ததால் ஆத்திரத்தில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராணியின் கழுத்தில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே ராணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News