செய்திகள்

சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் 11 ஆயிரம் பேர் பயணம்

Published On 2018-10-29 09:53 GMT   |   Update On 2018-10-29 09:53 GMT
சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. #ChennaiCitybus
சென்னை:

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 3,400-க்கும் மேற்பட்ட பேருந்துகளை, 673-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கி வருகிறது.

9.88 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி, ஏறத்தாழ 37 லட்சம் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும்பங்காற்றி வருகிறது.

சாதாரண பேருந்துகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கர் பேருந்துகளில் ஒட்டப்பட்டதன் பயனாக, பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போர் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகப்பட்சமாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜூலை மாதத்தில் 3,575 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,67,900ம், ஆகஸ்ட் மாதத்தில் 4,082 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.6,74,650-ம் வசூலிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் 3,700 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.6,78,250-ம் ஆக மொத்தம் 11,357 பேரிடம் அபராதத் தொகையாக ரூ.19,20,800 வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். #ChennaiCitybus
Tags:    

Similar News