செய்திகள்

மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி

Published On 2018-10-22 05:29 GMT   |   Update On 2018-10-22 05:29 GMT
மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியான நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Denguefever

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ராஜாஜி அரசினர் மருத்துமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இவர்களின் பலர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றாலும் உள் நோயாளிகளாக 90 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வைரஸ் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதற்கிடையே டெங்கு அறிகுறியுடன் 30 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனை வந்தனர். அவர்களில் பைகாராவைச் சேர்ந்த பெரிய மாயன் மனைவி மீனாட்சி (வயது 49), அனுப்பானடி வீரம்மாள் (70) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள புல்லக்காய்பட்டியைச் சேர்ந்த அரசு கால்நடை உதவியாளர் பெருமாள் (42), மதுரை அனுப்பாடின அகிலன் (21), சுந்தர், சாமிராஜ் ஆகியோர் பன்றி காய்ச்சல் தடுப்பு பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Denguefever

Tags:    

Similar News