செய்திகள்

அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிட தொழிலாளி கைது

Published On 2018-10-17 14:09 GMT   |   Update On 2018-10-17 14:09 GMT
அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:

அரியலூர் தடையப்ப தெருவை சேர்ந்தவர் செல்வி(11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் படித்து வருகிறார். 

இந்நிலையில்செல்வியின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக்  கொண்டிருந்தார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாரிமுத்து (வயது 19)  என்பவர் அங்கு வந்தார். அவர் செல்வியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். 
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மாரி முத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இது குறித்து செல்வியின் பெற்றோர் அரியலூர் அனைத்து  மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரி முத்துவை  போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். 
Tags:    

Similar News