சத்தியமங்கலம் அருகே மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்ளனரா? என போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுப்படி நக்சல் பிரிவு போலீசார், சிறப்பு அதிரடி படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மற்றும் ஆதி வாசிகளை குறி வைத்து அவர்களை மூளை சலவை செய்து தங்கள் வசப்படுத்த மாவோயிஸ்டுகள் திட்ட மிட்டு செயல்படுவதாக தகவல் வந்தது.
இதன் அடிப்படையிலேயே சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியை தமிழக போலீசார் முடக்கி விட் டுள்ளனர்.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்கம் வன கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நக்சல் மற்றும் அதிரடிப்படை போலீசார் 25-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர்.
புதிய நபர்கள் யாராவது வருகிறார்களா? பண உதவி செய்கிறோம் என கூறி ரேசன் கார்டு, ஆதார் கார்டுகள் கேட்கிறார்களா? என கேட்டறிந்தனர்.
அப்படி யாராவது வந்தால் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடி மக்களை கேட்டு கொண்டனர்.
கடம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார வன கிராமங்கள் மற்றும் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. #Maoist