செய்திகள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் தமிழ்வேந்தன் (வயது 26).
இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இடையில் அவர் கல்லூரிக்கு வராததால் கல்லூரியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் அவர் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மைய கட்டிடத்துக்கு சென்றார். அங்கு 4-வது மாடிக்கு ஏறினார். அங்கிருந்து திடீரென்று கீழே குதித்தார்.
இதில் அவரது தலை மற்றும் மூக்கில் அடிபட்டது. பலத்த காயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்வேந்தன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகர் செய்யப்பட்டது. தமிழ்வேந்தன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் தமிழ்வேந்தன் (வயது 26).
இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இடையில் அவர் கல்லூரிக்கு வராததால் கல்லூரியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் அவர் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மைய கட்டிடத்துக்கு சென்றார். அங்கு 4-வது மாடிக்கு ஏறினார். அங்கிருந்து திடீரென்று கீழே குதித்தார்.
இதில் அவரது தலை மற்றும் மூக்கில் அடிபட்டது. பலத்த காயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்வேந்தன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகர் செய்யப்பட்டது. தமிழ்வேந்தன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.