செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை ரெயில் நிலையத்தில் ஸ்மார்ட் டி.வி மூலம் இந்தி

Published On 2018-08-06 08:51 GMT   |   Update On 2018-08-06 08:51 GMT
தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரெயில் நிலையத்தில் ஸ்மார்ட் டி.வி. மூலம் இந்தி சொல்லித் தரப்படுகிறது. #MaduraiRailwayStation
மதுரை:

தமிழகத்தில் முதல்முறையாக மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ‘தினமும் ஒரு இந்தி வார்த்தை’ என்கிற திட்டத்தை ஸ்மார்ட் டிவி மூலம் சொல்லி தரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதாவது ஸ்மார்ட் டி.வி.யில் 30 இந்தி வார்த்தைகள் படத்துடன் இடம்பெறும். அத்துடன் தமிழ்- ஆங்கில உச்சரிப்பு, பொருள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

இதுதவிர ஒருசில இந்தி படங்களின் இனிமையான காட்சிகளும் நடுவில் வரும்.

ஸ்மார்ட் டி.வி. வாயிலாக இந்தி வார்த்தைகள் கற்பிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். கே. குல்ஸ்ரேஷ்டா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனுஇட்டியொரா மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #MaduraiRailwayStation

Tags:    

Similar News