செய்திகள்
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 27-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 27-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. #SathyabamaUniversity #SathyabamaConvocation
சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் மொகாபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர்களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, மாணவ மாணவிகள், பெற்றோரையும், அவர்கள் துறை சார்ந்த பேராசிரியர்களை என்றும் மறவாமல் வாழ்க்கையில் மேன்மையடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பிற்கு நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண்டு, அதாவது 2019 ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். #SathyabamaUniversity #SathyabamaConvocation
சென்னை ராஜீவ்காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர், திரிலோச்சன் மொகாபத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குனர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குனர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன், இணை வேந்தர் சசி பிரபா, பதிவாளர் S.S. ராவ், ஆராய்ச்சி இயக்குனர் ஷீலா ராணி, நிர்வாக இயக்குனர் லோக சண்முகம், மாணவ மாணவிகளின் டீன் சுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத்தலைவர் பூனியா, மாணவ மாணவிகள், பெற்றோரையும், அவர்கள் துறை சார்ந்த பேராசிரியர்களை என்றும் மறவாமல் வாழ்க்கையில் மேன்மையடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்பிற்கு நீட் என்னும் தகுதி தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்பிற்காக நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண்டு, அதாவது 2019 ஆண்டு முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். #SathyabamaUniversity #SathyabamaConvocation