செய்திகள்

கடல் நீரை குடிநீராக்கும் டெண்டரை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

Published On 2018-07-16 12:58 IST   |   Update On 2018-07-16 12:58:00 IST
கடர் நீரை குடிநீராக்கும் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் சுமார் ரூ.1,259 கோடி செலவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கடந்த ஆண்டு சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளிகள் கோரியது.

இந்த டெண்டருக்கு விண்ணப்பித்த 5 நிறுவனங்களை தேர்வு செய்து ராஞ்சியில் உள்ள ஆய்வு நிறுவனத்திற்கு ஆய்வுக்காக குடிநீர் வாரியம் அனுப்பியது.

இந்த ஆய்வு நிறுவனம் 5 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளையும் நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் இரு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு நிறுவனத்தை சட்ட விரோதமாக தேர்வு செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறி சிங்க் எலக்ட்ரிகல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது டெண்டரில் பங்கேற்காத இந்த நிறுவனம் வழக்கு தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #HighCourt
Tags:    

Similar News