செய்திகள்
கடனாநதி அணை

கடனாநதி அணையில் இருந்து 1035 கன அடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2018-07-16 04:09 GMT   |   Update On 2018-07-16 04:09 GMT
நெல்லை மாவட்டம் கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 1035 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #KadanaNathiDam
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. உபரி நீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், கனமழையால் கடனாநதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 1035 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #FloodAlert #KadanaNathiDam
Tags:    

Similar News