செய்திகள்

ஒகேனக்கல்லில் 6-வது நாளாக பரிசல் இயங்கவில்லை

Published On 2018-07-05 11:52 IST   |   Update On 2018-07-05 11:52:00 IST
ஒகேனக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவில்லை.
ஒகேனக்கல்:

கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பியது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்த கன மழையால் கர்நாடகா அணையான கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவு எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருந்தது.

தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது. இன்று 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, காவிரி கரையோரம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News