செய்திகள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இன்று மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சூழல் இருக்கிறது. ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 8 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தை விட 57 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பதிவான மழை அளவு வருமாறு:-
திருச்சி மாவட்டம் சமய புரத்தில் 17 செ.மீ., காஞ்சீபுரத்தில் 10 செ.மீ., பூந்தமல்லி, உத்திரமேரூரில் தலா 9 செ.மீ., திருவள்ளூர், செங்கம், லால்குடி, திருத்தணியில் தலா 8 செ.மீ., ஆலங்காயம், பூண்டி, கும்பகோணம், வலங்கைமான், கொடுமுடி, சாத்தனூர் அணை, பாபநாசம், திருச்சி விமானநிலையம், திருவண்ணாமலை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 7 செ.மீ., கலவை, செய்யாறு, வால்பாறை, வடசென்னை, தர்மபுரி, முசிறி, நத்தம், மாதவரம், புல்லம்பாடியில் தலா 6 செ.மீ. உள்பட அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. #tamilnews
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சூழல் இருக்கிறது. ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 8 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தை விட 57 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பதிவான மழை அளவு வருமாறு:-
திருச்சி மாவட்டம் சமய புரத்தில் 17 செ.மீ., காஞ்சீபுரத்தில் 10 செ.மீ., பூந்தமல்லி, உத்திரமேரூரில் தலா 9 செ.மீ., திருவள்ளூர், செங்கம், லால்குடி, திருத்தணியில் தலா 8 செ.மீ., ஆலங்காயம், பூண்டி, கும்பகோணம், வலங்கைமான், கொடுமுடி, சாத்தனூர் அணை, பாபநாசம், திருச்சி விமானநிலையம், திருவண்ணாமலை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 7 செ.மீ., கலவை, செய்யாறு, வால்பாறை, வடசென்னை, தர்மபுரி, முசிறி, நத்தம், மாதவரம், புல்லம்பாடியில் தலா 6 செ.மீ. உள்பட அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. #tamilnews