செய்திகள்

முத்துப்பேட்டையில் கர்ப்பிணி பெண் கற்பழிப்பு: கணவரின் நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2018-06-27 15:33 IST   |   Update On 2018-06-27 15:33:00 IST
முத்துப்பேட்டையில் வாயில் துணியை திணித்து கர்ப்பிணி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு படித்துறை பகுதியில் வசிப்பவர் முருகானந்தம்(வயது24), திருப்பூரில் வேலை பார்க்கும் போது தன்னுடன் வேலை பார்த்த முருகவள்ளி(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் ஊர் திரும்பி ஆலங்காடு பகுதியில் வசித்து வருகின்றனர். தற்போது முருகவள்ளி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் முருகானந்தத்தின் நண்பர்களான பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூவரசன்(23), ஜாம்புவானோடையை சேர்ந்த மாரிமுத்து மகன் நித்தியானந்தன் (25) ஆகியோர் நேற்று பேட்டை கோவிலில் நடந்த திருவிழாவிற்கு முருகானந்ததை அழைத்து சென்றுள்ளனர். அங்கு முருகானந்தத்தை விட்டுவிட்டு அவருக்கு தெரியாமல் ஊர் திரும்பியுள்ளர்.

பின்னர் பூவரசன், நித்தியானந்தன் ஆகியோர் முருகானந்தம் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தனியாக இருந்த முருகவள்ளியின் வாயில் துணியை வைத்து கட்டி 2 பேரும் சேர்ந்து கற்பழித்து உள்ளனர். அப்போது அங்கு வந்த முருகவள்ளியின் மாமியார் பார்வதி இதனை பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் முருகவள்ளி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் பூவரசன், நித்தியானந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். முருகவள்ளியை போலீசார் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் திருத்துறைப்பூண்டி கோர்டில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News