செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர் பேட்டி கொடுக்க மறுப்பு

Published On 2018-06-26 09:44 GMT   |   Update On 2018-06-26 09:44 GMT
நான் எனது பேரனை பார்க்க வந்துள்ளதால் இப்போதைக்கு பேட்டி வேண்டாம் என்று எஸ்.வி. சேகர் பேட்டி அளிக்க மறுப்பு தெரிவித்தார்.
கோபி:

நடிகர் எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்தை பகிர்ந்திருந்தார்.

இதையொட்டி எஸ்.வி. சேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யாமல் போலீசார் இழுத்தடித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. கடந்த 20-ந்தேதி எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் எஸ்.வி. சேகரின் மருமகளுக்கு மகன் பிறந்துள்ளான். பேரனை பார்ப்பதற்காக எஸ்.வி.சேகர் நேற்று இரவு கோபி சென்றார்.

சம்பந்தி வீட்டுக்கு சென்ற எஸ்.வி.சேகர் பேரனை பார்த்து கொஞ்சினார். அங்குள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். நேற்று பிரதோஷம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த எஸ்.வி.சேகரிடம் நிருபர்கள் பேட்டிக்கு சென்றனர்.

அப்போது எஸ்.வி.சேகர், என்மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. நான் எனது பேரனை பார்க்க வந்தேன். இப்போதைக்கு பேட்டி வேண்டாம் என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்று விட்டார்.

Tags:    

Similar News