செய்திகள்

முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published On 2018-06-13 08:50 GMT   |   Update On 2018-06-13 08:50 GMT
மத்திய அரசு முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நிலக்கோட்டை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிலக்கோட்டை வந்தார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. தற்போது மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்னலை தருகிறது.

விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டது. மாட்டுஇறைச்சி கடை மூலம் ஏழை மக்களுக்கு எதிரான போக்கை கையாண்டு உள்ளது. 2015-ம் ஆண்டு தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 38 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டது. 2016-ம் ஆண்டு அது 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வன்கொடுமை தடுப்புசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அந்த சட்டத்தை நீர்த்துபோகசெய்யும். கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் ரூ.70ஆயிரத்தை திருப்பி கட்டவில்லை என வங்கி அதிகாரிகள் தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் மத்திய அரசு முதலாளிகளுக்கு கோடிகணக்கில் கடன் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறது. எனவே இவர்கள் ஏழைகளுக்காக செயல்படவில்லை. முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளனர்.

இதனை எதிர்ப்பதற்காகத்தான் போராடுவோம் தமிழகமே என குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மாநில அரசு 800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடஉள்ளது. அதில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்தில் 72 பள்ளிகள் மூடப்பட உள்ளன. கேரளாவில் அரசு பள்ளிகளை மேம்படுத்தி கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி சவுந்திரராஜன், ஒன்றிய செயலாளர் காசிமாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews

Tags:    

Similar News