செய்திகள்
ஊதுபத்தி கம்பெனியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி.

வாலாஜா அருகே ஊதுபத்தி கம்பெனியில் தீ விபத்து- பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2018-06-12 05:25 GMT   |   Update On 2018-06-12 05:25 GMT
வாலாஜா அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனியில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
வாலாஜா:

வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் ஆற்காடு தெற்கு தெருவில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனி கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதில் ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊதுபத்தி கம்பெனி திறக்கப்பட்டு மாலை வழக்கம் போல் பணிகள் முடிந்து மூடிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஊதுபத்தி கம்பெனியின் ஏ பிளாக் பிரிவில் திடீரென தீபிடித்தது. பற்றி எரிந்த தீ அறை முழுவதும் பரவியது. கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியில் வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். அதற்குள் ஊதுபத்தி கம்பெனி முழுவதும் தீ வேகமாக பரவியது. ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை போராடி அணைத்தனர். தீயால் பாதிப்படைந்த ஊதுபத்தி கம்பெனி சுவர் இடிக்கப்பட்டது.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தயார் செய்யப்பட்ட நிலையில் இருந்த ஊதுபத்தி மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து விடியற்காலையில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். #Tamilnews
Tags:    

Similar News