செய்திகள்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கைது

Published On 2018-06-08 06:15 GMT   |   Update On 2018-06-08 06:15 GMT
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கடல் தீபனை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அரசியல் கட்சியினர் நெய்வேலி என்.எல்.சி.அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

முன்னதாக கியூ பாலத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜி, உமர்முப்தார், சுந்தரமூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன், கடல்தீபன் ஆகியோர் மீது நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கர்நாடக பஸ் மீது கல்வீசிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நெய்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கிலும் கடல்தீபனை தெர்மல் போலீசார் நேற்று கைது செய்து நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
Tags:    

Similar News