செய்திகள்

ஓசூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2018-05-29 06:34 GMT   |   Update On 2018-05-29 06:34 GMT
ஓசூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிளைச் சிறையில் தற்போது 32 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் அடிதடி வழக்கில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த தனஞ்ஜெய் (வயது 40) என்ற கைதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலை 7.30 மணிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் வாசல் வழியாக சென்றாரா அல்லது கழிவறை வழியாக சென்றாரா என்று தெரியவில்லை.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.

Tags:    

Similar News