செய்திகள்

தூத்துக்குடி கலவரம் - துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு வைகோ ஆறுதல்

Published On 2018-05-23 09:30 IST   |   Update On 2018-05-23 09:30:00 IST
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயமடைந்தவர்களை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #SterliteProtest #BanSterlite #SterlitePolicefiring
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் வன்முறை வெடித்தது. துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் வரை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு தூத்துக்குடி சென்றுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ள வைகோ, ஆலை மூடப்படும் வரை தனது போராட்டம் தொடரும் என கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite #SterlitePolicefiring
Tags:    

Similar News