செய்திகள்

மதுரையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது

Published On 2018-05-20 12:38 GMT   |   Update On 2018-05-20 12:38 GMT
மதுரையில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் சுந்தரம். இவரது முதல் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 12 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

முதல் மனைவியின் தங்கையை சுந்தரம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தரம் மகளிடம் தவறாக நடந்து கொண்டார். இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இரண்டு நாட்களாக மகள் என்றும் பாராமல் தவறான முறையில் நடந்து கொண்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அக்கம் பக்த்தினர் கேட்டபோது நடந்த விவரத்தை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை கைது செய்தனர்.

Tags:    

Similar News