செய்திகள்
கொடுங்கையூரில் வீட்டின் பூட்டைஉடைத்து நகை-பணம் கொள்ளை
கொடுங்கையூரில் வீட்டின் பூட்டைஉடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் எழில்நகர் தொப்பை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலான்கோ. இவர் தனது வீட்டு அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் குடும்பத்துடன் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்றிருந்தார். இன்று காலையில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் 10 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.