செய்திகள்

சிவகங்கை கோட்டத்தில் 12 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம்

Published On 2018-04-04 13:15 IST   |   Update On 2018-04-04 13:15:00 IST
சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் 12 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையத்தினை கோட்ட கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:

தபால் துறை மூலம் தபால் அலுவலங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை தலைமை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களான இளையான்குடி, காளையார்கோவில் சாலை கிராமம், ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், ஒக்கூர், திருப்பத்தூர், கல்லல், சிவகங்கை கலெக் டர் அலுவலகம் ஆகிய 12 அஞ்சலகங்களில் இந்த சேவை செயல்பட தொடங்கி உள்ளது.

சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமை போஸ்ட் மாஸ்டர் வீர பாண்டி, கோட்ட அஞ்சலக உதவி ஆய்வாளர் சித்ரா, போஸ்ட் மாஸ்டர் கருப்பையா, அலுவலர்கள் மதி, நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மையத்தில் புதிய ஆதார் அட்டையை பதிய கட்டணம் இல்லை. தொலைபேசி எண் மாற்றம், முகவரி மாற்றம் திருத்தங்களுக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


Similar News