செய்திகள்
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டை கண்டித்து வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி நிறுத்தம்
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டை கண்டித்து வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் மூவாயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் மூவாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இந்த உப்பளத் தொழிலாளர்களுக்கென வேதாரண்யம் வடக்குவீதியில் வேதாரண்யம் உப்பளத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் உள்ளது. சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தில் ரூ.2 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இதில் 80 லட்சம் ரூபாய் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் முறைகேடாக நடந்ததை கண்டித்து இந்த உப்பளப் பகுதியில் உப்பு ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உப்பு ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் வெளியூரிலிருந்து வந்த அனைத்து லாரிகளும் சாலை ஒரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் லாரி ஓட்டுநர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உப்பளப் பகுதியில் பாக்கெட்டில் உப்பு போடும் பணியும் நிறுத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்ததால் அகஸ்தியன்பள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் மூவாயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் மூவாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இந்த உப்பளத் தொழிலாளர்களுக்கென வேதாரண்யம் வடக்குவீதியில் வேதாரண்யம் உப்பளத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் உள்ளது. சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தில் ரூ.2 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இதில் 80 லட்சம் ரூபாய் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் முறைகேடாக நடந்ததை கண்டித்து இந்த உப்பளப் பகுதியில் உப்பு ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உப்பு ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் வெளியூரிலிருந்து வந்த அனைத்து லாரிகளும் சாலை ஒரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் லாரி ஓட்டுநர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உப்பளப் பகுதியில் பாக்கெட்டில் உப்பு போடும் பணியும் நிறுத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்ததால் அகஸ்தியன்பள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.