செய்திகள்
காதலித்து ஏமாற்றியதாக பெண் புகார் - அன்வர் ராஜா எம்.பி. மகன் மீது வழக்கு
காதலித்து ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அன்வர் ராஜா எம்.பி. மகன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி:
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது 35). தொழில் அதிபரான இவர் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி தன்னை காதலித்து தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாகவும், அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் நாசர் அலிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதனை தடுக்க ரொபினா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து, ரொபினா காரைக்குடி காவல் நியைத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி, ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நாசர் அலி மீது, காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது 35). தொழில் அதிபரான இவர் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், ராமநாதபுரம் எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி தன்னை காதலித்து தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றியதாகவும், அவரது குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் நாசர் அலிக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காரைக்குடியை அடுத்த அரியக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதனை தடுக்க ரொபினா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து, ரொபினா காரைக்குடி காவல் நியைத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி, ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நாசர் அலி மீது, காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews