செய்திகள்
பெண் தொழில் அதிபரை ஏமாற்றி திருமணம்: அன்வர்ராஜா எம்.பி. மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு
சென்னை பெண் தொழில் அதிபரை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக அன்வர்ராஜா எம்.பி. மகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி:
சென்னை மடிபாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது33). தொழில் அதிபரான இவர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரும், ராமநாதபுரம் அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நாசர் அலியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ரொபினா திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார். திருமண மண்டபத்திற்கு சென்ற அவர் அழுது புரண்டு போராட்டம் நடத்தினார். ஆனால் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் நாசர்அலி மீது காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி நாசர் அலி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டார். அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் பணத்தை திருப்பிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் பெண் என்றும் பாராமல் என்னை நாசர்அலி கொடுமைப்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து அன்வர் ராஜா எம்.பி. மகன் நாசர்அலி மீது கொலை மிரட்டல், பெண் கொடுமை, பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
சென்னை மடிபாக்கம் ராம்நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா (வயது33). தொழில் அதிபரான இவர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரும், ராமநாதபுரம் அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியும் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நாசர் அலியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ரொபினா திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார். திருமண மண்டபத்திற்கு சென்ற அவர் அழுது புரண்டு போராட்டம் நடத்தினார். ஆனால் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் நாசர்அலி மீது காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி நாசர் அலி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டார். அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் பணத்தை திருப்பிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் பெண் என்றும் பாராமல் என்னை நாசர்அலி கொடுமைப்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து அன்வர் ராஜா எம்.பி. மகன் நாசர்அலி மீது கொலை மிரட்டல், பெண் கொடுமை, பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews